விவசாயிகள் தற்கொலைக்கு இதுதான் காரணம்... மத்திய பிரதேச அரசு கொடுத்த புது விளக்கம்
மத்திய பிரதேச அரசு விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களுக்கு கொடுத்துள்ள விளக்கம் சமூக ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது.
போபால்: விவசாயிகள் தற்கொலைகளுக்கு, குடும்பப் பிரச்சினைகள், மதுப்பழக்கம், உடல் நலக்கோளாறு ஆகியவையே காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் பதிலில், 'போலீஸ் நிலையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகள் இல்லை. தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

'குடும்பப் பிரச்சனை, மதுப்பழக்கம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள் ஆகியவையே விவசாயிகள் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581-ஆக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இது பழைய தந்திரம்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை.
விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத் திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி. தற்கொலைகளுக்கு கடன்தான் காரணம் என்று காவல் நிலையங்கள் பதிவுகூட செய்வதில்லை. நாட்டின் விவசாயக் கொள்கை, விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளி, மீளமுடியாத நிலையில் தற்கொலைக்கு தூண்டுகிறது' என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications