விவசாயிகள் தற்கொலைக்கு இதுதான் காரணம்... மத்திய பிரதேச அரசு கொடுத்த புது விளக்கம்
மத்திய பிரதேச அரசு விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களுக்கு கொடுத்துள்ள விளக்கம் சமூக ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது.
போபால்: விவசாயிகள் தற்கொலைகளுக்கு, குடும்பப் பிரச்சினைகள், மதுப்பழக்கம், உடல் நலக்கோளாறு ஆகியவையே காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் பதிலில், 'போலீஸ் நிலையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகள் இல்லை. தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

'குடும்பப் பிரச்சனை, மதுப்பழக்கம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள் ஆகியவையே விவசாயிகள் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581-ஆக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இது பழைய தந்திரம்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை.
விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத் திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி. தற்கொலைகளுக்கு கடன்தான் காரணம் என்று காவல் நிலையங்கள் பதிவுகூட செய்வதில்லை. நாட்டின் விவசாயக் கொள்கை, விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளி, மீளமுடியாத நிலையில் தற்கொலைக்கு தூண்டுகிறது' என்று கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications