For Daily Alerts
Just In
மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை
நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை: மாநகராட்சி, நகராட்சி எல்லைகளுக்குள் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியது. இதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, நகர எல்லைகளுக்குள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. அதே நேரத்தில் இந்த உத்தரவால் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
மேலும் நெடுச்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட 1,700 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
The Madras High court today dismissed the TamilNadu Govt's plea for New Tasmac shops in Highways.
Story first published: Saturday, April 28, 2018, 17:16 [IST]