காவிரியில் மணல் அள்ள செப்.11 வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
காவிரியில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை: காவிரி ஆறறில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதிவரை தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கரூர் - திருச்சி இடையே உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதால்,அங்குள்ள பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே ஒரு குழு அமைத்து காவிரியில் போதியளவு மணல் உள்ளதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் மணல் அள்ள மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரூர் - திருச்சி இடையேயான காவிரியாற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் வரும் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி வரை மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications