காவிரியில் மணல் அள்ள செப்.11 வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
காவிரியில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை: காவிரி ஆறறில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதிவரை தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கரூர் - திருச்சி இடையே உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதால்,அங்குள்ள பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே ஒரு குழு அமைத்து காவிரியில் போதியளவு மணல் உள்ளதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் மணல் அள்ள மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரூர் - திருச்சி இடையேயான காவிரியாற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் வரும் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி வரை மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications