கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தேவை... ஹைகோர்ட் நீதிபதிகள் கருத்து!
கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை : கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் பண்டையக் கால நாகரீக நகரம் ஒன்று நிலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும், இவை பழங்காலத் தமிழகர்கள் பயன்படுத்தியப் பொருட்கள் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழடியில் 4வது அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர வேண்டும் என்று கனிமொழிமதி என்பவர் மதுரைக்கிளை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் கீழடியில் நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கீழடி தென்பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள் பெயர் மற்றும் சர்வே எண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நில உரிமையாளர்களை எதிர்மனுதாரராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அகழ்வாராய்ச்சி பணி நீட்டிப்பு தொடர்பாக மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications