நடிகை ராணி பத்மினி கொலையாளி 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலை- ஹைகோர்ட் உத்தரவு
சென்னையில் 31 ஆண்டுகளுக்கு முன் நடிகை ராணி பத்மினி கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளியை 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுவிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை: நடிகை ராணி பத்மினி மற்றும் அவரது தாயார் இந்திரகுமாரியை கொலை செய்த வழக்கில் 18 ஆண்டுகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கொலையாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வில்லியனூர் மாதா, நிரபராதி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ராணி பத்மினி. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் ராணி பத்மினி நடித்திருந்தார்.

சென்னை அண்ணா நகரில் தாய் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார் நடிகை ராணி பத்மினி. இவரும் 1986-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ராணி பத்மினி வீட்டின் காவலாளி லட்சுமி நரட்சிம்மன், கார் ஓட்டுநர் ஜெபராஜ், சமையல்காரர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவருக்கும் 1989-ம் ஆண்டு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இத்தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓட்டுநர் ஜெபராஜூக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அத்துடன் லட்சுமி நரசிம்மன், கணேசன் இருவரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் ஜெபராஜ், லட்சுமி நரசிம்மன், கணேசன் மூவருக்குமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லட்சுமி நரசிம்மன், கணேசன் இருவரும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இதனிடையே 2008-ம் ஆண்டு 1405 கைதிகள் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிக்கப்பட்டனர். 7 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்தோரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது லட்சுமி நரசிம்மனை விடுவிக்க கோரி அவரது மனைவி மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணையின் முடிவில் இன்று 18 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications