காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
மதுரை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த வக்கீல் ராய்ஸ் இமானுவேல், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் அனைத்து கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஜனாதிபதி, பாராளுமன்ற செயலாளர் என பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த தீர்மானத்தை மத்திய அரசு புறக்கணித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை 13-ம்தேதிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று நீதிபதிகள் ரவி, செல்வம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.











Click it and Unblock the Notifications