நான் ஒரு பாரம்பரியமான மட சாமி... மதுரை ஆதீனம்!
மதுரை: பாரம்பரியமிக்க மடத்தைச் சேர்ந்த நான், ஹெலிபேடு, கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது, சம்பிரதாயம் இல்லை. அதை, அவரும் விரும்பமாட்டார். அதனால்தான் நான் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக மதுரைக்கு வந்தபோது அங்கு போகவில்லை என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனம் ஆன்மீகத்தோடு அரசியலையும் கலந்து கட்டி அடிப்பதில் வல்லவர். அவ்வப்போது அரசியல் கருத்துக்களிலும் புகுந்து புறப்பட்டு வருபவர்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் அவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நக்கீரனுக்கு அவர் அளிததுள்ள பேட்டி...

பிரச்சாரம் எப்படி இருக்கிறது?
என் பேச்சை கேட்கணும்னு, எல்லோரும் விருப்பமாக இருக்காங்க. நல்லா கூட்டம் கூடுது. நான் சொல்றதை கேட்கணும் என்ற உணர்வு, அவர்களுக்கு இருக்கு. ஆதரவு தருகின்றனர். சாதாரண மடாதிபதி இல்லை. பழமையான ஆதீன மடத்தைச் சேர்ந்த பீடாதிபதி வந்து பேசுறதை, அவர்கள் வரவேற்கிறாங்க.

மதுரை வந்த ஜெ.வை சந்திக்காதது ஏன்?
பாரம்பரியமிக்க மடத்தைச் சேர்ந்த நான், ஹெலிபேடு, கூட்டங்களில் ஜெ.,வை சந்திப்பது, சம்பிரதாயம் இல்லை. அதை, அவரும் விரும்பமாட்டார். அதனால் நான் போகவில்லை.

பிற இடங்களில் பிரசாரம் செய்கிறீர்களா?
இல்லை. ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். ஏப்ரல் 14ல், மதுரையில் பிரசாரம் செய்கிறேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி பிரச்சாரம் செய்வேன்.

ஜெ.பிரதமராக சிறப்பு பூஜை செய்கிறீர்களா...
நான் தினமும் பூஜை செய்யும்போது, பிரார்த்தனை செய்து வருகிறேன்.

உங்கள் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள், பங்கேற்பதில்லையாமே?
இல்லை. யாராவது அப்படி சொல்வாங்க. உண்மையில், வேட்பாளர்கள், அமைச்சர்கள் எல்லாம், என் கூட்டத்தில் பங்கேற்கிறாங்க என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications