Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி: தடை கோரிய மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Madurai Bench quashes case against training Lankan defence personnel in India
மதுரை: இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-

இலங்கையில் நடந்த போரில் ஈழத்தமிழர்கள் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய அரசு அந்த முடிவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+