ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!
ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரை: ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

Recommended Video

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் பெஞ்ச் , ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுகக் வேண்டும் என உத்தரவிட்டனர். இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் செப்டம்பர் 7-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் ஆலோசனை வழங்க வேண்டும்; ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் நடவடிக்கை என ஊடகங்களில் கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிபிஐசிஐடி போலீஸ் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications