அனிதாவுக்கு நீதி கோரி மதுரையில் போராடிய 81 பேருக்கு சிறை
அனிதாவுக்கு நீதி கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை: அனிதாவுக்கு நீதி கோரி மதுரை தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளத்தில் போராட்டம் நடத்திய 81 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனிதாவுக்கு நீதி கோரியும் நீட்டை தடை செய்ய வலியுறுத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் ஆவேச போராட்டம் நடத்தினர். தமிழன்னை சிலையிடம் நீதி கேட்டு இந்த போராட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தப்பட்ட தமுக்கம் மைதானம் போர்க்களமாகிவிடக் கூடாது என்பதால் 60 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதேபோல் தல்லாகுளத்தில் போராட்டம் நடத்திய 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 81 பேரும் மதுரை 2-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 81 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து 81 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications