தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க பெப்சி, கோக்குக்கு ஹைகோர்ட் அனுமதி.. மக்கள் ஷாக்!
நெல்லை தாமிரபரணியில் இருந்து பெப்சி, கோக் ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியது. இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க தடையில்லை என்றும் கூறியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரபாகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 'தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்பான நிறுவனங்கள் 1000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 மட்டுமே கொடுக்கின்றன.
இவ்வாறு குறைந்த விலைக்கு தாமிரபரணி தண்ணீரை எடுக்கும் நிறுவனங்கள், குளிர்பானம் மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. எனவே, அந்த நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை விதித்தனர். இந்த நிலையில் இந்த இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். ஆலைகளுக்கு உபரிநீரை மட்டுமே பயன்படுத்துவதாக குளிர்பான ஆலைகள் கூறியதை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் கூறப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பொதுமக்களுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது.
வறட்சியால் தாமிரபரணியில் தண்ணீர் வற்றி 5 மாவட்டங்களுக்குக் குடி பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications