மு.க.அழகிரி மீதான வழக்கில் "அரசியல்" இல்லை, ரத்து செய்ய முடியாது... நீதிபதி உத்தரவு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மு.க.அழகிரியின் கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது கடந்த 26ம் தேதி நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனது, தயா பொறியியல் கல்லூரிக்கு கோவிலுக்கு சொந்தமான 44 செண்ட் நிலத்தை அபரித்தார் அழகிரி என்று குற்றச்சாட்டில் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற அழகிரி, தன் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பொய் வழக்கு என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தன் மீது இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரி தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியதை நீதிபதி கிருபாகரன் நிராகரித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தவிர, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நில அபகரிப்பு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
மேலும், அழகிரி மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை 16 வாரங்களுக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு அழகிரிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications