தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது கலெக்டர் எங்கே சென்றிருந்தார்? -ஹைகோர்ட் சரமாரி கேள்வி
துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் மக்கள்அமைதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியபோது மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
அப்போது 144 தடையை மீறி பேரணி சென்றதால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு
இதையடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அமைதியாக...
இது தொடர்பாக மதுரை ஹைகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைதியாக நடந்த 99 நாள் போராட்டத்தின் வீடியோவை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

ஆட்சியர் எங்கே
அதுபோல் தூத்துக்குடியில் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கி விவரங்களையும் அறிக்கையாக அளிக்க போலீஸுக்கு உத்தரவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார் என வினவினர்.

ஜூலை 18க்கு ஒத்திவைப்பு
எந்தெந்த வகை துப்பாக்கிகள் கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டன? என்பதையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications