ஜெயலலிதா வரவேற்பு பேனர்! உடனடியாக அகற்ற ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: ஜெயலலிவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகருக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மதுரையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை அவசர வழக்காக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜரானார். அரசு தரப்பில் அனுமதி பெற்றுதான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் வழக்கு தொடர்ந்த பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், எந்த ஒரு இடத்திலேயும் முறையான அனுமதி பெற்று வைக்க வாய்ப்பு இல்லை. ப்ளக்ஸ் பேனர்களால் பொதுமக்களின் போக்குவரத்திற்கும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக அந்த ப்ளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று தனது தரப்பு வாதத்தில் தெரிவித்தார்.
இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்குமாறு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கூறியது. அப்போது அரசு அனுமதி பெற்ற இடத்தை தவிர, அனுமதி பெறாத இடத்தில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை எடுத்துவிடுவதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications