கிரானைட் முறைகேடு வழக்கு – அழகிரி மகனின் ஜாமீன் மீதான நிபந்தனைகள் முழுவதும் தளர்வு
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிபந்தனை ஜாமீனை முழுமையாகத் தளர்த்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது மதுரை கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. பின்னர் அவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவின் அடிப்படையில் நிபந்தனைகளில் சில தளர்த்தப்பட்டன.

துரை தயாநிதி வெளிநாடு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பும், சென்று வந்த பிறகும் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளதால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. எனவே முன்ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மு.க.அழகிரி சார்பில் ஆஜரான வக்கீல் மோகன்குமார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு தரப்பில் ஜாமீன் நிபந்தனை தளர்வுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சொக்கலிங்கம் கேட்டபிறகு துரை தயாநிதியின் ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்வு செய்து உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications