அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் மதுரை வேட்பாளர் ‘திருநங்கை’ பாரதிகண்ணம்மா...
மதுரை: மு.க.அழகிரியைச் சந்தித்து தனக்கு ஆதரவளிக்கும் படி கோரினார் மதுரை லோக்சபா தொகுதி சுயேட்சை வேட்பாளரான திருநங்கை பாரதி கண்ணம்மா.
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரியை பல்வேறு கட்சியினரும் சந்தித்து தங்களுக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கும் படி வேண்டி வருகின்றனர்.

அந்தவகையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக சார்பில் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் பல காங்கிரஸ் வேட்பாளர்கள் என இதுவரை அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டவர்கள் பலர்.
தற்போது அந்த வரிசையில் மதுரை லோக்சபா தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கும் திருநங்கை பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து விட்டார். இன்று மதுரையில் அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பாரதிகண்ணம்மா.
இந்த சந்திப்பின்போது, லோக்சபா தேர்தலில் தனக்கு ஆதரவு தரும்படி அழகிரியிடம் கேட்டுக் கொண்டார் பாரதிகண்ணம்மா.












Click it and Unblock the Notifications