நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார்.
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் மகேஸ்வரி (வயது 25). மகேஸ்வரி நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்கு எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்
மார்ச் 30ம் தேதி இரவு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.

மாணவிகள் ஓட்டம்
இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற பயங்கரமாக சத்தம் கேட்டது. அப்போது யாரோ ஒரு பெண் அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதாம். இதையடுத்து அங்கிருந்த மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்துள்ளார்கள்.

சிகிச்சை
பல்கலைக்கழக விடுதியின் தரைதளத்தில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மகேஸ்வரியை கொண்டு சென்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசார் விசாரணை
அங்கு மாணவி மகேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை
இதற்கிடையே சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார்கள். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications