மதுரை அருகே கொடூரம்.. வீட்டு வாசலிலேயே வக்கீலுக்கு சரமாரி வெட்டு...நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மதுரை அருகே வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் அவரது வீட்டு வாசலில் வைத்தே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
மதுரை : மதுரை மேலூர் பகுதியில் வழக்கறிஞர் ரவிச்சந்திரனை அவரது வீட்டு வாசலிலேயே வைத்து மர்ம நபர்கள் சரமாறியாக வெட்டி சாய்த்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலூர் நாகம்மாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன். நேற்று இரவு வெளியில் சென்று விட்டு ரவிச்சந்திரன் வீடு திரும்பியுள்ளார்.
தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டு கேட்டை தாண்டிய போது வாசலிலேயே காத்திருந்த மர்ம நபர் ஒருவர் ஹாக்கி ஸ்டிக்கால் பின் பக்கமாக ரவிச்சந்திரனை தாக்கியுள்ளார். இதனைத் தொடர்து வந்த மற்றொரு நபர் வாழை மரத்தை வெட்டுவது போல அசால்ட்டாக தான் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தப்பியோட்டம்
இதில் நிலை தடுமாறி ரவிச்சந்திரன் வீட்டு வாசலிலேயே சரிந்து விழுந்தார். இதனையடுத்து தாக்குதலை அரங்கேற்றியவர்கள், சாலையில் தயாராக காத்திருந்த வாகனத்தில் ஏறி புறப்பட்டனர்.

அதிர வைக்கும் காட்சிகள்
மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே சர்வசாதாரணமாக அரங்கேறியுள்ள இந்த கொலை வெறித்தாக்குதல் ரவிச்சந்திரன் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலை வெறித்தாக்குதல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரத்த வெள்ளம்
வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனை அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தார் மீட்டு மேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதல்கட்ட சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக ரவிச்சந்திரன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
ரவிச்சந்திரன் மீது முன் விரோதம் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதா, அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதேனம் பிரச்னையா என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications