அன்று மரியம் பிச்சை.. இன்று சீனிவேல்.. அதிமுகவைத் துரத்தும் துயரம்
சென்னை: 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சியமைத்தது. அப்போது புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் அமைச்சராகப் பதவியேற்றிருந்த அதிமுகவின் மரியம் பிச்சை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இப்போது மீண்டும் அதே போன்றதொரு துயரத்தை அதிமுக சந்தித்துள்ளது, சீனிவேல் ரூபத்தில்.
மரியம் பிச்சை எம்.எல்.ஏவாக பதவியேற்க வந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். சீனிவேலும் அதேபோல எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும், தொடர்ந்து 2வது முறையாக இதேபோன்ற துயரத்தை கட்சி சந்தித்துள்ளதே என்ற வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் மரியம் பிச்சை திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.என்.நேருவை அவர் வீழ்த்தியிருந்தார். இதனால் அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அமைச்சர் பதவியை ஏற்ற மரியம் பிச்சை திருச்சி திரும்பினார். இந்த நிலையில் 2011, மே 23ம் தேதி சட்டசபை கூடி புதிய உறுப்பினர்கள் பதவியேற்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்னை கிளம்பினார்.
அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர். இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலதுபுறமாக திரும்பியுள்ளது. இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.
எம்.எல்.ஏ தேர்தலில் மரியம் பிச்சை போட்டியிட்டது அதுதான் முதல் முறை. முதல் முறையே நேரு என்ற மிகப் பெரிய தலையை சாய்த்ததால் மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் துரதிர்ஷ்டமும் அவர் கூடவே வந்து கூட்டிக் கொண்டு போய் விட்டது.
தற்போது 5 ஆண்டுகள் கழித்து அதே போல எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நாளில் அதிமுகவின் சீனிவேல் மரணமடைந்திருப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications