ஜல்லிக்கட்டுக்கு போல உக்கிரமடையும் மாணவர் போராட்டம்- மதுரையில் போலீஸ் தடியடி
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.
Recommended Video

மதுரை: ஜல்லிக்கட்டுக்குத் திரண்டு போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியல், பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் தடியடி
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி மதுரை மூலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பேருந்து நிலையம் முற்றுகை
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு
தருமபுரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழக அரசை கண்டித்து பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 25ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திரளும் மாணவர்கள்
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராடியது போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்தது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த ஆண்டு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications