மதுரையில் எண்ணெய் வியாபாரி வீடு மீது குண்டுவீச்சால் பரபரப்பு - வீடியோ
மதுரையில் எண்ணெய் வியாபாரி வீட்டு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை எண்ணெய் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கிருந்த கார் நாசமானது. பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் வீட்டிலிருந்த காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவைப் பகுதி மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த கார் மட்டும் சேதமடைந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications