மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.. பாய்ந்து தடுத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீரத்துறையைச் சேர்ந்தவர் விஜயா. ஆசிரியராக பணியாற்றும் விஜயாவிடம் அவருக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தை 18 லட்சம் கொடுத்து கிரையம் முடிப்பதற்காக ராமலட்சுமி என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் கடந்த 6 மாதமாக கிரயம் செய்யாமல் விஜயா மோசடி செய்து வருவதாக புகார் கொடுத்தும் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது மதுரை கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்தார் ராமலட்சுமி.

ஆனால் கலெக்டரிடம் மனு கொடுக்க விடாமல் போலீஸார் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி, கூடவே கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார்.

இதையடுத்து அதிர்ந்து போன போலீஸார் அவரை தடுத்து விசாரித்தனர். இதன் பின்னர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+