குப்பைக் காடாக மாறிய மாமல்லபுரம்"பீச்".. முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் ஓடுவதால் அக்கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழர்களின் பண்டைய நாகரிகத்துக்கு அடையாளமான கோவில் கட்டிடக்கலை உருவான இடம் சென்னையை அடுத்து அமைந்துள்ள மாமல்லபுரம் எனும் மகாபலிபுரம்.

தமிழகத்தின் சிற்பக்கலை சிறப்பிற்கு ஆதாரமாக விளங்குவது அங்கு அமைந்துள்ள கடற்கரை கோவில் மற்றும் சிற்பங்கள்.
ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்:
அதை பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒத்தவாடைதெரு விடுதிகளில் தங்கி இருந்து கடற்கரையில் அமர்ந்து கடல் அலையுடன் கோவிலை பார்த்து ரசிப்பது வழக்கம்.
குப்பைகள் எரிப்பு:
தற்போது கனமழையால் சேதமடைந்த ஓலைக் கூரைகள், கழிவுபொருட்கள் போன்ற குப்பைகளை கடற்கரையில் போட்டு பொதுமக்கள் எரிக்கிறார்கள்.
சாக்கடையாய் ஓடும் கழிவு:
மேலும் கழிவுநீர் சாக்கடையாக ஓடுவதாலும் கடற்கரை மாசுபட்டு சுகாதாரம் இன்றி கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
பயணிகள் கோரிக்கை:
வருகிற ஜனவரி 5 ஆம் தேதி இந்திய நாட்டிய விழா தொடங்குகிறது. அதற்கு முன்பு கடற்கரைகயை சுத்தமாக வைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications