"மகாராஷ்டிரா முதல்வர் யாரு".. அன்னிக்கே சொல்லிருக்கார் பாருங்க "ஆண்டவர்".. வைரலாகும் வீடியோ!
கமலின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் காட்சி வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், நாடே உற்று நோக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வு நடந்து வருகிறது.. இந்த சமயத்தில், கமல் நடித்த ஒரு திரைப்பட காட்சியை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அதனை இப்போது வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
குதர்க்கம் என்றும் சொல்லிவிட முடியாது.. துடுக்குத்தனம் என்றும் சொல்லிவிட முடியாது.. இவை இரண்டுக்கும் நடுவில் அறிவார்ந்த பதிலை பல சமயங்களில் சொல்லிவிடுவார் கமல்ஹாசன்.கடந்த 2017-ல் யாதும் தமிழே என்ற நிகழ்ச்சியில் கமலிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
"கேரளா முதல்வரை போய் சந்திச்சீங்களே... இங்க இருக்கிற தமிழக முதல்வரை சந்திக்க மாட்டீங்களா?" என்று கேட்டனர். அதற்கு கமல், "இங்கேயும் எனக்கு சந்திக்க ஆசைதான். ஆனா போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம்தான்" என்றார்.

3 முதல்வர்
கமல் இதை விளையாட்டாக சொன்னாலும், உண்மையிலேயே அந்த குறுகிய காலகட்டத்தில், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 3 முதல்வர்கள் அரியணை ஏறியதை தமிழகம் கண்கூடாக கண்டது! இப்போதும் அப்படிப்பட்ட ஒரு கேள்விதான் கமலிடம் கேட்கப்படுகிறது. இதற்கும் துடுக்குத்தனமாகவே ஒரு பதில் வருகிறது.. ஆனால், இது நிஜத்தில் இல்லை.. சினிமாவில்!
வறுமையின் நிறம் சிவப்பு
1980-ம் ஆண்டு வெளிவந்த "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற படத்தில் கமல் வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில் கமல் வேலை தேடி ஒரு இன்டர்வியூ செல்வார். அங்கிருப்பவர்கள், மஹாராஷ்டிரா முதல்வர் யார்? என்ற கேள்வியை கேட்பார்கள்.

சரத்பவார்
அதற்கு கமல், "எப்போதைய முதல்வர்? இன்னைக்கா? நேற்றா? அல்லது நேற்று முன்தினமா? ஏன்னா இங்க தினம் ஒரு முதலமைச்சர் மாறிக் கொண்டே இருக்கிறார்" என்று பதிலளிப்பார். கமல் சொன்னபடி, அன்றே மகாராஷ்டிரா கலகலத்து காணப்பட்டது.. இன்று போலவே அன்றும் கலக்கி கொண்டிருந்தது சரத்பவார்தான்.

வைரல் சீன்
இப்படி ஒரு காட்சியை படத்தில் புகுத்திய இயக்குனர் சிகரத்தின் துணிச்சலுக்கு ஆயிரம் முறை கைகுலுக்கலாம். நேற்றிரவு இருந்த நிலவரம் மாறி, பொழுதுவிடிந்ததுமே அரசியல் நிகழ்வு தலைகீழாகிவிட்ட நிலையில், கமல் நடித்த இந்த காட்சியை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். கமல் கேட்ட கேள்விதான் நமக்கும் கேட்க தோன்றுகிறது.. "மகாராஷ்டிரா முதல்வர் யார்?" என்று!!
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications