அன்புமணி ராமதாஸ் வீட்டில் இளம்பெண் தற்கொலைக்கு காரணம் என்ன? புதிய தகவல்கள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் சென்னை வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காதல் விவகாரம்தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர் திலக் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீடு உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பாடிநாகவேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற கோதண்டன் மகள் மாலினி (வயது 19) வேலை செய்து வந்தார்.

இவர் தந்தை கண்ணன் இறந்துவிட்டார். தாய் பட்டு இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மூலம் அன்புமணி ராமதாஸ் வீட்டில் கடந்த 11 மாதங்களுக்கு முன் மாலினி வேலைக்குச் சேர்ந்தார்.
அவருக்கு அன்புமணி வீட்டின் முதல் தளத்தில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலினி கடந்த வியாழக்கிழமை தனது ஊரில் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை திருவிழாவில் பங்கேற்பதற்காக அன்புமணி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து மாலினி ஞாயிற்றுக்கிழமை காலை அன்புமணி வீட்டுக்கு திரும்பி வந்தார். அன்று வழக்கமான பணியில் ஈடுபட்ட மாலினி நேற்று காலை 7.30 மணிக்கு பின்னரும் பணிக்கு வரவில்லையாம்.
இதையடுத்து மாலினி அறையை பார்க்க அங்கு பணிபுரியும் அரக்கோணம் வடக்கண்டிகை சின்ன சைனாபுரத்தைச் சேர்ந்த அன்புமணி என்பவர் பார்க்கச் சென்றார். அவர் ஜன்னல் வழியாக மாலினி தங்கியிருந்த அறையை எட்டிப் பார்த்தபோது மாலினி அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது பெங்களூரில் ஓட்டுநராக இருக்கும் மேகநாதன் என்பவருக்கும் மாலினிக்கும் பழக்கம் இருந்துள்ளது; தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேகநாதனிடம் மாலினி கெஞ்சியுள்ளார். இது தொடர்பாக தாயார் பட்டுவுடனும் மாலினி சண்டை போட்டிருந்தாராம்..
ஞாயிற்றுக்கிழமை இரவு வெகுநேரம் மேகநாதனிடம் செல்போனில் மாலினி பேசியிருக்கிறார்.. இந்த விவகாரத்தில்தான் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது பெங்களூருவில் உள்ள மேகநாதனை போலீசார் சென்னைக்கு வரவழைத்துள்ளனர். மாலினின் தாய் பட்டுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications