மலர்கள் நனைந்தன பனியாலே... மனங்கள்...? சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைத்ரேயன் எம்பி

அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை கிடைத்தவுடன் இணைந்து விட்டதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மலர்கள் நனைந்தன பனியாலே... மனங்கள்...? சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைத்ரேயன் எம்பி- வீடியோ

    சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை கிடைத்தவுடன் இணைந்து விட்டதாகவும் மதுசூதனனை வெற்றியடைய செய்வோம் என்றும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அந்த அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

     மனங்கள் இணையவில்லை

    மனங்கள் இணையவில்லை

    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் மனங்கள் இணையவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை கூறியபோது இது எனது சொந்த கருத்து இல்லை, ஒட்டுமொத்த தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றார்.

     மைத்ரேயன் எழுப்பினார்

    மைத்ரேயன் எழுப்பினார்

    ஓபிஎஸ் அணியை தனித்து பார்ப்பதாகவும் மைத்ரேயன் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்ட போதும் மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் தரப்பினர் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அதையும் மைத்ரேயனே எழுப்பினார். இந்நலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

     முதல்வர், துணை முதல்வர்

    முதல்வர், துணை முதல்வர்

    இதுகுறித்து தந்தி டிவிக்கு மைத்ரேயன் எம்.பி. அளித்த பேட்டியில் கூறுகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை வேட்பாளர் மதுசூதனன் வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்குகிறார். இன்றைய தினம் மாலை முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர்.

     முதல்வர், துணை முதல்வர்

    முதல்வர், துணை முதல்வர்

    இதுகுறித்து தந்தி டிவிக்கு மைத்ரேயன் எம்.பி. அளித்த பேட்டியில் கூறுகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை வேட்பாளர் மதுசூதனன் வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்குகிறார். இன்றைய தினம் மாலை முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர்.

     ஓரணியில் தேர்தல்

    ஓரணியில் தேர்தல்

    அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு வாக்குச் சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. இரு அணிகளும் பிரிந்திருந்தன சூழ்நிலை அன்று வேறு. இருவரும் ஓரணியிலே திரண்டு இன்று தேர்தலை சந்திக்கவுள்ளோம்.

    இலையால் மனங்கள் இணைந்தன

    மலர்கள் நனைந்தன பனியாலே... மனங்கள் இணைந்தன இலையாலே...இந்த தேர்தலில் மதுசூதனனை வெற்றி பெறச் செய்து அவரை சட்டமன்ற உறுப்பினராக்குவதுதான் ஜெயலலிதாவுக்கு நாங்கள் செய்யும் காணிக்கை.
    இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்து கழகம் ஒன்றுபட்டு வெற்றியை சூடுவோம் என்றார் அவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+