2009-ல் ஜெ.வுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதம்-பகிரங்கப்படுத்தினார் மைத்ரேயன்
2009-ல் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதத்தை அதிமுக எம்.பி. மைத்ரேயன் வெளியிட்டுள்ளார்.
சென்னை: 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் தமிழீழம் அமைய பாடுபடுவேன் என தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தமது மூலமாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் நடேசன் அனுப்பி வைத்த கடிதத்தை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மைத்ரேயன் தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு:

இன்று தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 வது பிறந்த நாள். 2009 ம் ஆண்டு ஈழ விடுதலைப் போரின் இறுதிக்கட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்.
2009 ஏப்ரல் 25 ம் தேதி சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ் ஈழம் அமைய பாடுபடுவேன் என்று குரல் கொடுத்தார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரபாகரன் அம்மா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார். நண்பர் நடேசன் அனுப்பிய மின்னஞ்சலை பதிவு செய்கிறேன்.
அக்கடிதத்தில் நடேசன் எழுதியுள்ளதாவது:
நேற்று சேலத்தில் இடம்பெற்ற அ.இ.அ.தி.முகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தோம். எமது தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள் எல்லோரும் அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்கள்.

ஏழு கோடி தமிழக மக்களின் குரலாக அம்மாவின் குரல் ஒலித்ததைக் கண்டு கவலைகளையும் துன்பங்களையும் மறந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக அம்மா அவர்களுக்கு தலைவர் அவர்கள் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அத்துடன் எங்கள் எல்லோருடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு நடேசன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications