For Daily Alerts
Just In
சென்னை மின்சார ரயில்கள் ரத்து – தண்டவாள சீரமைப்பிற்காக சனி, ஞாயிறுகளில் சேவையில் மாற்றம்
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது. மே மாதம் 10 ஆம் தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளி
அதன்படி மதியம் 12.43, 12.56, 1.23, 1.35 மணி சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரையில்தான் அலுவலகங்களுக்கு செல்வோர் கூட்டம் மின்சார ரயில்கள் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்பு பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது.
Comments
English summary
Owing to girder change and maintenance work on two bridges between sengalpat and tambaram stations of Chennai section, Southern Railway has cancelled a few trains and imposed regulations on movement of other trains.
Story first published: Thursday, March 5, 2015, 18:04 [IST]