ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் ம.ந.கூ போட்டி.. திருமாவளவன் அறிவிப்பு

சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தொல்.திருமாவளவனும் மார்க்சிஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் ஆலோசனையில் ஈடுபட்டார் திருமாவளவன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆர்.கே நகர் தொகுதியில், போட்டியிடுவது குறித்து தொல். திருமாவளவன் ஜி.ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்ததால், ஏப்ரல் 12ஆம் தேதி அங்கு, இடைத் தேர்தல் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Makakl koottiyakkam Thol Thiruma announced they will contest in by elecetion

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளும் மற்றும் திமுகவும் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நல கூட்டியக்கத்தைச் சேர்ந்த தொல். திருமாவளவனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை செய்தனர். பின்பு, மக்கள் நல கூட்டியக்கம், இடைத்தேர்தலில் போட்டியிடும் என திருமாவளவன் தெரித்துள்ளார்.

சென்னை, தி.நகரில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பிறகே மக்கள் கூட்டியக்கத்தின் போட்டியிடும் முடிவை அறிவித்தனர்.

மக்கள் கூட்டியக்கம், முன்பு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயருடன் இயங்கி வந்தது. மதிமுக தலைவர் வைகோ அக்கூட்டணியிலிருந்து விலகி விட்டதால், தற்போது மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+