மலாயாப் பல்கலைக்கழகம்.. தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன!!!
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகளை பதிவேற்றம் செய்யுமாறு மலாயாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகளை பதிவேற்றம் செய்யுமாறு மலாயாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மலாயாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

30/10/2018-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொண்டு (Register) கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications