கார்த்திகை தீபம்.. மல்லிகைப் பூவுக்கு கிராக்கி.. பக்தர்கள் திண்டாட்டம்
கரூர்: கார்த்திகை தீபத்தையொட்டி மல்லிகைப் பூவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கரூரில் பக்தர்கள் திண்டாடிப் போயினர்.
கரூர் ரயில் நிலையம் அருகே கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கி கரூர், மண்மங்கலம், உப்பிடமங்கலம், லந்த கோட்டை, சேங்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, மருவு, அரளி ஆகிய பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் தொடர் மழையாலும், தொடர் பனியாலும் பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மல்லிகை பூ ஆனது விற்பனையும், விளைச்சலும் தற்போது மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று மார்க்கெட் நிலவரப்படி மல்லிகை பூ கிலோ ரூ 1300 ஆக இருந்தது. ஆனால் இன்று மல்லிகை பூ வரத்து இல்லவே இல்லை. இதனால் கார்த்திகை தீபம் என்பதால் பக்தர்கள், பெண்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதே போல் செவ்வந்தி கிலோ ரூ 120 டூ 160 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. மருவு ரூ 70 கிலோவுக்கு இன்று விற்பனை செய்யப்படுவதாக பூ மார்க்கெட் சங்க செயலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications