68 திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட கேரளத்து ஜெகஜ்ஜால “வக்கீல் சஜீவன்” சென்னையில் கைது..!
சென்னை: கிட்டதட்ட 68 வழக்குகளில் தேடப்பட்ட சென்னையை கலக்கிய கேரள கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் சஜீவன் என்ற வக்கீல் சஜீவன். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
இவர் மீது சென்னையில் 28 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 40 வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே 8 முறை சிறைக்கு சென்றுள்ளார்.

10வது வகுப்பு மட்டுமே படிப்பு:
10 ஆவது வகுப்பு வரை படித்துள்ள இவர், வக்கீலுக்கு படித்துள்ளதாக ஏமாற்றி வந்தார். இதனால் இவரை "வக்கீல் சஜீவன்" என்று போலீசார் அழைத்தனர். இவர் வீடுகளில் புகுந்து திருட மாட்டார். அதிகாலை வேளையில்தான் தொழிலை தொடங்குவார்.
ஒன்லி கேஷ் திருட்டு:
பூட்டிக்கிடக்கும் அலுவலகங்கள், நிறுவனங்களில் ரொக்கப்பணத்தை மட்டும் கைவைப்பார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள அக்கா ஒருவர் மட்டும் இருக்கிறார். சென்னை வேளச்சேரியில் வசிக்கிறார். 89 ஆம் ஆண்டில் இருந்து திருட்டு தொழிலை செய்கிறார்.
பணக்கார கொள்ளையன்:
இவர் திருடி சம்பாதித்த பணத்தில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார். அழகிகளுடன் உல்லாசம் அனுபவிப்பார். சொகுசு காரில் சுற்றுவார். திருடப்போகும் போது ஆட்டோ சவாரிதான் பிடிக்கும். இவரை பணக்கார கொள்ளையன் என்றும் போலீசார் அழைக்கிறார்கள். கொள்ளைத்தொழிலில் கூட்டணி வைப்பதில்லை. தனி ஆளாகவே தொழில் செய்து வந்தார்.
தனிப்படை அமைப்பு:
இவர் கடைசியாக சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகரில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து புகுந்து ரூபாய் 28 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடினார். ஆடிட்டர் அலுவலகத்தில் திருடியபோது, அங்குள்ள கேமராவில் இவரது உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமரா படத்தை பார்த்து இவரை கைது செய்ய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் இவரை தேடி வந்தனர்.
வளைத்துப் பிடித்த கமிஷனர்:
உதவி கமிஷனர் தங்கராஜ், நேற்று பகலில் தனது ஜீப்பில் நந்தனம் சிக்னல் அருகே செல்லும் போது, கொள்ளையன் சஜீவன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார். இதைப்பார்த்த உதவி கமிஷனர் தங்கராஜ் சஜீவனை மடக்கிப்பிடித்து, கைது செய்தார். போலீசார் சஜீவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications