பிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது
மோடியைப் பற்றி ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: பிரதமர் மோடியை விமர்சித்ததால் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் திருமுருகனை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜகவினல் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் திருமுருகனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications