"பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க, போதும் வேணாம்.." மறுத்த கள்ளக்காதலி.. வெட்டிக் கொன்ற ராமு!
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை கொன்றவர் அதிரடி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

உளுந்தூர்பேட்டை: "பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க.. இனிமே இதெல்லாம் வேணாம்" என்று சொன்ன கள்ளக்காதலியை தாறுமாறாக கத்தியால் வெட்டி கொன்றுள்ளார் ஒருவர்!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொடிபவுனு. இவருக்கு வயது 40. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களை காப்பாற்ற கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டிவந்தார் கொடி பவுனு.
இந்த நிலையில் கொடிபவுனுவுக்கும், குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்கிற லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது விரைவில் கள்ளக்காதலாக மாறியது. ராமுவுக்கு வயது 32. அடிக்கடி மகள்கள் இல்லாத சமயத்தில் ராமு கொடிபவுனின் வீட்டுக்கு போவதும், வருவதுமாக இருந்தார். இதை கண்டுபிடித்த கொடிபவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

பெரியவர்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு ராமுவை பார்க்க குமாரமங்கலம் சென்றார். அப்போது ராமுவிடம், "என் பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க. அவங்க பெரியவர்களாகிவிட்டதால், இனிமேல் என்னை தேடி வராதே, இதெல்லாம் வேணாம்" என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அழுதுகொண்டே சென்றார்
இதுதான் தகராறாக வெடித்திருக்கிறது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்காமல் கொடிபவுனு அழுதுகொண்டே வீட்டுக்கு போய்விட்டார். கொடிபவுனு அழுதுகொண்டே வீட்டுக்கு செல்லவும், அவரை சமாதானம் செய்வதற்காக ராமு நேற்று சிறுவத்தூர் கிராமம் சென்றார்.

அரிவாளால் வெட்டினார்
கொடிபவுனிடம் ராமு சமாதானம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் வாக்குவாதம்தான் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமு, கொடிபவுனை கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். மகளை வெட்டுவதை பார்த்த கொடிபவுனுவின் தாய் ராசாத்தி ராமுவை தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்ட ராமு, திரும்பவும் கொடிபவுனுவை அரிவாளால் வெட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொடிபவுனு கீழே சரிந்து விழுந்து துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். இதை பார்த்த ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

3 மணி நேரம்
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடிபவுனுவின் உடலை கைப்பற்றி, தப்பியோடிய ராமுவையும் தனிப்படை அமைத்து தேட ஆரம்பித்தனர். ஆனால் கொலை நடந்த 3 மணி நேரத்திற்குள்ளேயே உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்த ராமுவை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications