சென்னையில் ரயில்மோதி ஒடிஷா கைதி பலி: போலீசிடம் இருந்து தப்பிய போது பரிதாபம்!
சென்னை: ஒடிஷா காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடிய கைதி ஒருவர் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆதம்குமார்நாயக் என்பவர் மீது அம்மாநிலத்தின் உதயகிரி காவல் நிலையத்தில், வழிப்பறி உட்பட, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஒடிஷாவில் இருந்து கேரளா தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார். அவரை ஒடிசா போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர் கன்னியாகுமரி- ஹவுரா ரயிலைப் பிடிப்பதற்காக தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கைதியுடன் போலீசார் சென்றனர். அங்கு ஐந்தாவது நடைமேடையில் போலீசாருடன் காத்திருந்த போது கைதி ஆதம்குமார்நாயக் திடீரென தப்பி ரயில் பாதையில் இறங்கி ஓடினார்.
அப்போது கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி ஆதம்குமார்நாயக் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தப்பி ஓடிய போது விபத்தில் உயிரிழந்து விட்டாரா என்று தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications