காதல் மனைவியை மீட்டு தருமாறு தொழிலாளி கொடுத்த மனுவால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும் என சாத்தான்குளத்தை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அருகே கீழக்கருங்கடல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ். இவர் துத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "நான் ஓட்டல் தொழிலாளி. நானும் எனது உறவினரான இளங்கோ மகள் மீனா சுசிலாவும், கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். 22.7.2015 அன்று மீனா என்னைத் தேடி திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்த்த ஓட்டலுக்கே வந்துவிட்டார்.

வீட்டில் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டதால், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். அதனால் நானும் மீனாவும், புனலூரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் மீனாவின் தாயார் மல்லிகா, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீனாவை நான் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். இதன்பேரில் நானும், மீனாவும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 27.7.2015 அன்று ஆஜரானோம்.போலீஸ் விசாரணையில் மீனா, விருப்பத்தின் பேரிலேயே என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
அதற்கு மல்லிகா, தற்போது ஆடி மாதமாக இருப்பதால் முறைப்படி திருமணம் செய்ய முடியாது என்றும், ஆவணி மாதத்தில் திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து, திருச்செந்தூர் ஜீவா நகரில் வசித்து வரும் மீனாவின் அத்தை லெட்சுமி வீட்டிற்கு அழைத்து சென்று வீ்ட்டு காவலில் வைத்ததாக தெரிகிறது.
அத்தை வீட்டிற்கு சென்ற மீனா ஓரிரு நாட்கள் மட்டுமே என்னுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பின் அவள் தொடர்பு கொள்ளவில்லை. நான் முயன்ற போதும் செல்போனில் பேச முடியவில்லை. இதையடுத்து நான் மீனாவை சந்திக்க திருச்செந்தூர் சென்றபோது, மீனாவின் அத்தை லெட்சுமியும், அவரது கணவர் செந்திலும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி விட்டனர்.
தற்போது எனது மனைவி மீனாவை மும்பைக்கு அழைத்துச் சென்று ஒழுங்காக உணவு கொடுக்காமலும், யாருடன் பேசாமலும் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வருகிறார். எனவே தாங்கள் எனது மனைவியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications