மாட்டுவண்டிக்கு லஞ்சம் கேட்ட நபர் கைது – போலீசாருக்காக வாங்கியதாக வாக்குமூலம்
ஈரோடு: ஈரோட்டில், மாட்டு வண்டிக்காரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய நபர் ஒருவர் போலீஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு நகரிலுள்ள கருங்கல்பாளையம் "செக்போஸ்ட்" பகுதியில், நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி ஆய்வில் ஈடுபட்டார்.
அவ்வழியாக பள்ளிபாளையம், மற்றும் சேலம் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த மாட்டு வண்டிகள், மினி டோர் ஆட்டோகள், டெம்போ உள்ளிட்ட வாகனங்களை செக்போஸ்ட் அருகே வழிமறித்து நிறுத்தும் நபர், ஒவ்வொரு வண்டியின் ஒட்டுனரிடமும் தலா, 20 ரூபாய் வசூலித்துக்கொண்டு வண்டியை அனுமதித்துக்கொண்டு இருந்தார்.
இந்த காட்சியை நீண்ட நேரம் நின்று கண்காணித்த எஸ்.பி.சிபிசக்ரவர்த்தி, அந்த நபரை பிடித்துக்கொண்டுவந்து விசாரணை நடத்தியுள்ளார்.செக்போஸ்ட்டில் பணியிலிருக்கும் போலீஸார் கூறியதால் தான் வசூலில் ஈடுபட்டதாக அந்த நபர் சொல்லியுள்ளார். "செக்போஸ்ட்" பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., செல்லமுத்து, ஏட்டு வடிவேல் ஆகியோரிடம், எஸ்.பி., விசாரித்தார்.
'ஐயா சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது' என்ற அவர்கள் பதிலில், திருப்தியடையாத எஸ்.பி, சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய, டவுன் டி.எஸ்.பி., பெரியய்யாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, போலீஸார் இருவரிடமும், நேற்று மாலை டவுன் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை, எஸ்.பி., பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, "சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க, டவுன் டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications