”வேலை கிடைக்கலையே” – விரக்தியில் தூக்கில் தொங்கிய ஊட்டி இளைஞர்

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மார்க்கெட் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஊட்டி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

Man got suicide for jobless…

இவரது மகன் கவுதம்ராம். பி.சி.ஏ. முடித்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. எனவே கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் வீடு திரும்பினார். நேற்று பிற்பகல் பெட்டிக்கடையில் இருந்து வீட்டுக்குச் சென்ற அவர் அதன் பின்னர் கடைக்கு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த அவரது தந்தை வீட்டுக்கு சென்று பார்த்தபோது கவுதம்ராம் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவுதம்ராம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+