3வது மனைவியுடன் தகராறு… 2வது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொன்ற குடிகார தந்தை
நாகப்பட்டினம்: மூன்றாவது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள போலகம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (48). விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பவானி, 2வது மனைவி சவுந்திர வள்ளி ஆகியோர் இறந்து விட்டனர். இதனை தொடர்ந்து உமாபதி என்ற பெண்ணை 3வதாக திருமணம் செய்து இருந்தார்.
இவரது 2 வது மனைவிக்கு பிறந்த மகள் சங்கீதா (16) போலகம் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு ராமகிருஷ்ணன் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அவர் மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் உமாபதி கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார்.
வீட்டில் இருந்த சங்கீதா தந்தையை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் மகள் என்று பாராமல் சங்கீதாவின் கழுத்தை அரிவாளால் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட எஸ்.பி அபினவ் குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசான் சாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மகள் என்றும் பாராமல் குடிபோதையில் கொலை செய்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications