For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை: மாற்றுத்திறளாளி இளம்பெண் பலாத்காரம்- கல்லூரி ஊழியர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோயம்புத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

காரமடை ஆதி மாதையனூரை சேர்ந்த 22 வயதான இளம்பெண் இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகள்.

இந்திரா பிறவியிலிருந்தே வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஆவார். இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் சிதம்பரம் (வயது 40). தனியார் கல்லூரியில் ஊழியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் இந்திராவின் பெற்றோர் வேலைக்கு சென்றதும் வீட்டுக்குள் புகுந்த தம்பரம். அங்கு தனியாக இருந்த ருக்குமணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். திடீரென்று வலுக்கட்டாயமாக இந்திராவைத் தனது ஆசைக்கு இணங்க வைத்து பலாத்காரம் செய்துவிட்டார். வாய் பேச முடியாத காரணத்தால் இந்திராவினால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்து சிதம்பரம் தப்பிச்சென்று விட்டார்.

இதனையடுத்து இந்திரா தனியாக அழுது கொண்டு இருந்தார். அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாயிடம் நடந்தவற்றை கூறினார். அதிர்ச்சியடைந்த இந்திராவின் தாயார் சிதம்பரத்தின் வீட்டுக்கு சென்று அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது சிதம்பரம் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார். இதுகுறித்து இந்திராவின் பெற்றோர் காரமடை போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிதம்பரத்தை கைது செய்தார். அவரை மேட்டுப்பாளையம் ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் சிதம்பரம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A 40-year-old man was arrested for raping a 22-year-old hearing and speech impaired young woman at Adhi Mathayanurr near Karamadai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X