குடிபோதையில் மோதிய சமையல்காரர்- கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்
சென்னை: சென்னை மதுரவாயலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரரை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி, 5வது பிளாக் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. ரத்தக்கறை படிந்த கல் ஒன்று அருகில் கிடந்தது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் அப்துல்கரீம் என்பது தெரியவந்தது. இவருக்கு ரம்ஜான்பீபி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு சம்பவம் நடந்த இடத்தில் அப்துல்கரீம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் அப்துல்கரீமின் நண்பர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்துல்கரீம் வினோத் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் இருவரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடங்காத வினோத் அருகில் கிடந்த கல்லை எடுத்து அப்துல்கரீம் தலையில் போட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அப்துல்கரீம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications