கள்ளக்காதலியை கொன்று தானும் விஷம் குடித்த காதலன் – மருத்துவமனையில் உயிரிழப்பு
திட்டக்குடி: கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்த காதலன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே மேல்பவழங்கூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரேமாவும், குமாரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.
அப்போது பிரேமாவும், சென்னை தாம்பரத்தை சேர்ந்த தேவகுமார் என்பவரும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேமா கணவனை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் சொந்த ஊரான வேப்பூர் அருகே நல்லூரில் தங்கி இருந்தார். அப்போது தேவகுமார் அடிக்கடி நல்லூருக்கு வந்து பிரேமாவை சந்தித்துவிட்டு செல்வார்.
இதற்கிடையே பிரேமாவுக்கு கணவனுடன் சேர்ந்து வாழ ஆசை ஏற்பட்டது. இதனையறிந்த தேவகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பிரேமாவை கொன்றுவிட தேவகுமார் முடிவு செய்தார். கடந்த 25 ஆம் தேதி தேவகுமார் குடிபோதையில் நல்லூருக்கு வந்தார்.
அங்கு பிரேமாவிடம் என்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்கும் உன்னை சும்மா விடமாட்டேன் என்று கூறி கத்தியால் பிரேமாவின் கழுத்தை அறுத்தார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரேமா இறந்து போனார்.
இதனை பார்த்ததும் பயந்துபோன தேவகுமார் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தயாராக வைத்திருந்த விஷத்தை அவர் குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை வேப்பூர் போலீசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் தேவகுமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை தேவகுமார் இறந்து போனார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications