கள்ளக்காதலியின் 3 வயது மகளை அடித்துக் கொன்ற வாலிபர் – போலீசார் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கள்ளக்காதலியின் மூன்று வயது மகளை அடித்துக் கொலை செய்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட அடப்பகாரசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாபுமணி. இவரது மனைவி நஸ்மா . இந்த தம்பதியின் ஒரே மகள் பிரியங்கா.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாபுமணி இறந்து விட்டார். இதையடுத்து நஸ்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து நஸ்மாவும், மணியும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீட்டில் கணவன், மனைவி போல இருவரும் வாழ்ந்து வந்தனர்.
குழந்தை பிரியங்காவையும், நஸ்மா தன்னுடன் வைத்துக்கொண்டார். இதை தொடர்ந்து மணியுடன், நஸ்மாவும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் நஸ்மா குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதிய வேளையில் நஸ்மாவிடம் செல்போனில் பேசிய மணி மாடியில் இருந்து தவறி விழுந்து பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்மா வீட்டுக்கு ஓடி வந்தார். இதற்கிடையே அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் குழந்தையின் உடலை பரிசோதித்த போது 3 மணி நேரத்திற்கு முன்பாகவே குழந்தை இறந்து விட்டது என்று கூறி உள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சுடப்பட்டிருப்பதையும் கண்டு பிடித்தனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த திருக்கோகர்ணம் போலீசாருக்கு மணி மீது சந்தேகம் எழுந்ததால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மணி அந்த குழந்தைக்கு நேற்று சூடு வைத்து சித்ரவதை செய்ததையும் ஒப்புக்கொண்டார். அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications