கர்ப்பிணி மனைவியுடன் கட்டாய உடலுறவு- மறுத்ததால் கொலை செய்த கணவர் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
4 மாத கர்ப்பமாக இருந்த மாலதியிடம் கடந்த 16 ஆம் தேதி மதியம் மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
அதன்பின் குளித்து விட்டு வந்த மாலதியை மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மாலதி சம்மதிக்கவில்லை. மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தியதால் மாலதி சத்தம்போட்டார். இதனால் மணிகண்டபிரபு போர்வையால் மாலதி முகத்தை அமுக்கினார்.
இதில் மூச்சு திணறிய மாலதி இறந்து விட்டார். இதனால் பயந்துபோன மணிகண்டபிரபு வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்ட பிரபுவை தேடி வந்தனர்.
கொலை சம்பவத்துக்கு பிறகு மணிகண்டபிரபு பழனி அருகே உள்ள கோரிக்கடவுக்கு சென்று குலதெய்வத்தை வணங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் சென்றார். நேற்று மாலை அவர் அங்கிருந்து வத்தலக்குண்டுவிற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
இதனை அறிந்த போலீசார் அவரை காட்ரோடு பகுதியில் கைது செய்தனர். நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications