ராசிபுரம் அருகே பயங்கரம்.. தாய்மாமனை கரண்டியால் குத்தியே கொலை செய்த சிறுவன்.. அதிரடி கைது!
மதுபோதையில் மாமாவை கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
ராசிபுரம்: ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாய்மாமனை மருமகன் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி பி.மேட்டூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். பக்கத்து வீட்டில் இவரது சகோதரி வசித்து வருகிறார். சகோதரிக்கு கவின்குமார் என்ற 18 வயது மகன் உள்ளான்.
இந்நிலையில் ஆனந்தகுமாரும், கவின்குமாரும், அதாவது தாய்மாமனும், மருமகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஆனந்தகுமார் தனது சகோதரியுடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகாது முறையிலும் பேசியுள்ளார். இது பின்னர் கைகலப்பாகவும் மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த அடைந்த கவின், வீட்டிலிருந்த கரண்டியால் ஆனந்தகுமார் வயிற்றில் பலமுறை ஆவேசமாக குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விரைந்து வந்த ராசிபுரம் போலீசார் ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றியதுடன், கவின்குமாரையும் கைது செய்து செய்தனர்.
இந்த கொலை குறித்து கவின்குமாரிடம் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் கவின்குமார் தாய்மாமனையே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.