போதை தலைக்கேறி 2 வயது குழந்தையையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் மது போதையில் பெற்ற 2வயது குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரையடுத்து பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. நெசவு தொழில் செய்து வரும் இவர், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மதுபோதையில் தனது இரண்டு வயது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயம் குறித்து கோதண்டபாணியிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. சந்தேகம் அடைந்த மனைவி கணவரின் செயல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், மதுபோதையில் மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கோதண்டபாணியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications