சிறுமி தற்கொலை வழக்கு: பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
சிவகங்கை: சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 ஆயிரம் ருபாய் அபராதம் விதித்து சிவகங்கை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது 16 வயது மகள் 2006 ஏப்ரல் 23ல் வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர் பாக்கியராஜ்,30 சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றார். மனமுடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய் தார். சிவகங்கை தாலுகா போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.

பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக இவர் மீது சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை சிவகங்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயராஜ் விசாரணை மேற்கொண்டார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில், பாக்கியராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய பாக்கியராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 5 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications