நெல்லையில் சுதந்திர தின விழாவில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாவட்ட கலெக்டர் தேசியக் கொடி ஏற்றியபோது ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் மாவட்ட கலெக்டர் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு அவர் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை பார்வையிட ஜீப்பில் ஏறினார். அப்போது அங்கிருந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்தார். அவர் தன் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் ஓடி வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியின்போது நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications