கள்ளக்காதல் ஜோடி எரிக்கரையில் மர்ம மரணம்… கொலையா.. தற்கொலையா.. அந்தியூரில் பரபரப்பு: வீடியோ
கள்ளக்காதல் ஜோடி ஒன்று ஏரிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனால் அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்: கள்ளக்காதல் ஜோடி ஒன்று வீட்டின் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தியூரை அடுத்த பூனாச்சி கொம்பை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேலு. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அவரவர்களின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இரு வீட்டு உறவினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத காதலர்கள் தொடர்ந்து தங்களது காதல் உறவை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரின் உடலும் எரிக்கரையில் பிணமாக கிடந்துள்ளது என்ற தகவல் பரவியது. மர்மமான முறையில் அவர்கள் இருவரும் இறந்து கிடந்ததால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கொலை செய்துள்ளனரா அல்லது அவர்களே தற்கொலை செய்து கொண்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் உடல் ஏரிக்கரையில் கிடப்பது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த உடன், விரைந்து வந்து பிரேதங்களை மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.