பசுவதை தடுப்புச் சட்டம்... களையிழந்த மணப்பாறை மாட்டு சந்தை: வீடியோ

மத்திய அரசின் பசுவதை தடுப்புச் சட்டத்தால், மணப்பாறை மாட்டு சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகலும் வியாபாரிகலும் பெரும் அகவ்லையில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பசுவதை தடுப்புச் சாடட்த்தின் எதிரொலியாக மணப்பாறை மட்டுச் சந்தையில் கூட்டம் குறைந்து, பல லட்சம் புழங்கும் சந்தை வியாபரம் பாதிக்கபப்ட்டதால் கல்நடை வளர்ப்பவர்கள் கவலையில் உள்ளனர்.

மத்திய அரசு, மாடுகளை இறைச்சிக்காக விற்கவோ வாங்கவோ கூடாது என பசுவதை சட்டத்தில் தடை போட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

 Manapparai cattle market affected due to central government's law

தமிழ்நாட்டில் திமுக, நேற்று இந்த சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என கூறி போராட்டம் நடத்தியது. விடுதலை சிறுத்தைகள்கட்சி, நாளை தமிழகத்தின் மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்த உள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, மணப்பாறையில் வழக்கம் போல் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் சந்தை களையின்றி காணப்பட்டது. மணப்பாறை மாட்டுச் சந்தை தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சந்தையாகும். இங்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்யப்படும்.

தற்போது பசுவதை தடுப்பு சட்டத்தின் விளாஇவாக மாடுகள் சந்தைக்கு அதிகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கில் வரும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து சில நூறு மாடுகளே வந்திருந்தன. இதனால் வியாபாரிகள் பெரும் வருத்தமடைந்தனர்.

வழக்கமாக செவ்வாய் மதியம் தொடங்கி, புதன்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் பல லட்சம் ரூபாய் பணம் புழங்கும். ஆனால், இந்த முறை சில ஆயிரங்கள் கூட வியாபாரம் நடைபெறவில்லை என்பதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெருத்த ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+